தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் வடக்கு மண்டல அலுவலகம் கான்பூரில் 1970-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1973-ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட) தொழில் பழகுநர் சட்டப்படி 1973- ஆம் ஆண்டு முதல் பொறியியலில் பட்டம் / பட்டயப்படிப்புப் படித்தவர்களின் தொழில் பழகுநர் பயிற்சி 1961-ஆம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிச் சட்டத்தின் நோக்க வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 1986ல், 1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டத்தில் அவ்வப்போது கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களின் படி, மேல்நிலை (10+2) தொழிற்பாடப் பிரிவில் பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சியும் இச்சட்டத்தின் நோக்க வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் இவ்வாரியம் உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவ்வப்போது கொண்டு வரப்படும் சட்டத்திருத்தங்களுக்கு ஏற்ப 1961-ஆம் ஆண்டின் தொழில் பழகுநர் சட்டப்படி தொழில் பழகுநர் பயிற்சித்திட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டது.
இச்சட்டம் பட்டதாரி, தொழில்நுட்ப வல்லுநர் (பட்டயம் பெற்றவர்) தொழில்நுட்ப வல்லுநர் (தொழில் கல்வி) தொழில் பழகுநர் என்பவரை 'பொறியியல் / தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் / பட்டயம் பெற்றவர் அல்லது அரசாங்கம் / அகில இந்திய தொழிற்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) ஒப்புக்கொண்ட 10+2 தேர்ச்சி சான்றிதழ் வைத்திருந்து தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர் அல்லது பெற்றுக் கொண்டிருப்பவர்' என வரையறுக்கிறது. இச்சட்டத்தின் கீழ் இவ்வாரியத்தில் உள்ள அதிகாரிகள், தொழில் பழகுதல் ஆலோசகர்கள் என அழைக்கப்படுவர். இவ்வாலோசகர்கள், மைய அரசுத் துறைகள், மைய அரசு பொறுப்பேற்பு (undertaking) நிறுவனங்கள், மாநில அரசுத் துறைகள், மாநில அரசு பொறுப்பேற்பு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோர் (பட்டதாரி / பட்டயம் பெற்ற பொறியாளர் மற்றும் 10+2 மேல்நிலையில் தொழிற்கல்வி பயின்றோர்) எனத் துறைவாரியாக உள்ள காலியிடங்களை அறிவிக்கை செய்வார்கள். பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்ற தொழில்நுட்பவியலாளர், மேல்நிலையில் தொழிற்கல்வி பயின்ற தொழில்நுட்ப வியலாளர்கள் அனைவருக்கும் இச்சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உதவித்தொகை வழங்கப்படும். தொகையில் 50% மையஅரசால், வேலையளிப்பவர் களுக்குத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் வழியாக ஈடு செய்யப்படும்.
இச்சட்டத்தின்படி தொழில் பழகுநர் பயிற்சிக்காலம் ஓராண்டாகும். இப்பயிற்சியின் தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் / ஜுலை மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே வேலையளிப்போர் புதிய தொழில் பழகுநர்களைப் பணியமர்த்திட வேண்டும். பயிற்சி முடித்த பிறகு வேலைவாய்ப்புக்கான உறுதி எதுவும் இல்லை. இவ்வொப்பந்தம், குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பாக முடிவுக்குக் கொண்டு வரப்படின் அதற்குப் பொறுப்பானவர் யாரோ அவர் உரிய இழப்பீட்டை வழங்கிடல் வேண்டும். எனினும் தொழில் பழகுநருக்கு லாபகரமான வேலை கிடைப்பதன் காரணமாகவோ மருத்துவ காரணங்களின் அடிப்படையிலோ ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுமாயின் இழப்பீடு அளிப்பது என்ற நிபந்தனை கைவிடப்படும்.
வாரியத்தின் நோக்கங்கள்: சங்கங்களின் பதிவுச் சட்டப் (1960) படி பதிவு செய்துள்ள வடக்கு மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரிய சங்கப் பொதுநிலை அறிக்கையில் வாரியத்தின் நோக்கங்களாக குறிப்பிட்டுள்ளவை:
மேற்கண்ட நோக்கங்களை அடைவதற்குரிய பொருத்தமான செயல்களை மேற்கொள்ளுதல்.
National Apprenticeship Training Scheme (NATS) portal provides a platform for various stakeholders like Students, Establishments and Institutions to leverage the Apprenticeship training programme.
உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்
Copyright © 2024 NATS. All Rights Reserved.